திருச்சி மாவட்டத்தில் உள்ள வளநாடு கைகாட்டி பகுதியில் முருகன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு ஜெயலட்சுமி என்ற மனைவி இருந்துள்ளார். சம்பவம் நடைபெற்ற அன்று முருகன் வேலைக்கு சென்று விட்டார். இந்நிலையில் வீட்டில் இருந்து ஜெயலட்சுமி படிக்கட்டில் இருந்து எதிர்பாராதவிதமாக தவறி கீழே விழுந்து படுகாயமடைந்தார்.

அவரை அக்கம் பக்கத்தினர் மீட்டு திருச்சி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று ஜெயலட்சுமி உயிரிழந்தார். இதுகுறித்த புகாரின் பேரில் வழக்குபதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.