கடலூர் மாவட்டத்தில் உள்ள வாகையூர் கிராமத்தில் ராஜ்குமார் என்பவர் வசித்து வருகிறார். இவர் அரசு நடுநிலைப் பள்ளியில் ஆசிரியராக வேலை பார்த்து வருகிறார். இவருக்கு சபிதா என்ற மனைவி இருந்துள்ளார். இவருக்கு ஒரு மகனும், ஒரு மகளும் இருக்கின்றனர். இந்நிலையில் ராஜ்குமார் வேலைக்கு சென்ற பிறகு சபிதா தனது கணவரை செல்போன் மூலம் தொடர்பு கொண்டு சென்னையில் இருக்கும் அக்காள் சுபிதாவின் வீட்டிற்கு செல்வதாக கூறியுள்ளார்.

அதற்கு ராஜ்குமார் நீ தனியாக செல்ல வேண்டாம்; நான் வந்து அழைத்துச் செல்கிறேன் என்று கூறியதாக தெரிகிறது. இதனால் மன உளைச்சலில் இருந்த சபிதா தனது வீட்டில் விஷம் குடித்து மயங்கி விழுந்தார். அவரை அக்கம் பக்கத்தினர் மீட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி சபிதா பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து வழக்குபதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.