கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள சுண்டக்காமுத்தூரில் நடராஜ் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு சீதாம்மாள்(82) என்ற மனைவி உள்ளார். இந்த மூதாட்டி தனியார் பேருந்தில் ராமநாதபுரம் சென்று அங்குள்ள சிக்னலில் இறங்கியுள்ளார். அப்போது அவரது கழுத்தில் கிடந்த மூன்று பவுன் தங்க நகை காணாமல் போனதை கண்டு அதிர்ச்சியடைந்தார்.

பேருந்தில் வைத்து மர்ம நபர்கள் தங்க சங்கிலியை திருடியது தெரியவந்தது. இது குறித்து சீதாம்மாள் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அந்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த போலீசார் மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.