கடலூர் மாவட்டத்தில் உள்ள திருப்பாதிரிப்புலியூர் கே.என் பேட்டை பகுதியில் டிரைவரான மணிகண்டன் என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கு சுபா என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதியினருக்கு ஒரு மகன் இருக்கிறான். இந்நிலையில் கணவன் மனைவிக்கு இடையே குடும்ப பிரச்சினை காரணமாக தகராறு ஏற்பட்டுள்ளது. இதனால் கடந்த மூன்று ஆண்டுகளாக இருவரும் பிரிந்து வாழ்கின்றனர்.

நேற்று முன்தினம் இரவு நேரத்தில் மணிவண்ணன் சூரப்பநாயக்கன் சாவடி பகுதிக்கு சென்று ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று மணிகண்டனின் உடலை மீட்டு அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து வழக்குபதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.