கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள கொண்டம்பட்டி முனியப்பன் கோவில் வீதியில் நாகசுப்பிரமணியம் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் டிரைவராக இருக்கிறார். இவருக்கு மூகாம்பிகா என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதியினருக்கு 16 வயதில் மகள் இருக்கிறார். இந்நிலையில் குடிப்பழக்கத்திற்கு அடிமையான நாகசுப்பிரமணியம் வேலைக்கு செல்லாமல் தனது மனைவியிடம் பணம் கேட்டு தொந்தரவு செய்துள்ளார்.

சம்பவம் நடைபெற்ற அன்று குடிப்பதற்கு பணம் கிடைக்காததால் மன உளைச்சலில் இருந்த நாக சுப்பிரமணியம் தனது வீட்டில் விஷம் குடித்து மயங்கி விழுந்தார். அவரை அக்கம் பக்கத்தினர் மீட்டு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி நாகசுப்பிரமணியம் பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து வழக்குபதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்