சேலம் மாவட்டத்தில் உள்ள நெத்திமேடு பகுதியில் வாசுதேவன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு வளர்மதி என்ற மனைவி உள்ளார். இந்நிலையில் வாசுதேவன் தனது குடும்பத்தினர் மற்றும் உறவினர்களுடன் நேற்று இரவு வேனில் திருச்செந்தூர் கோவிலுக்கு சாமி கும்பிடுவதற்காக புறப்பட்டார். இந்நிலையில் மதுரை மாவட்டத்தில் உள்ள திருமங்கலம் மேலக்கோட்டை அருகே சென்ற போது கட்டுப்பாட்டை இழந்த வேன் தடுப்பு சுவரில் மோதி நடுரோட்டில் கவிழ்ந்தது.

இந்த விபத்தில் வளர்மதி, ராஜ்குமார், ஷாலினி உள்பட 10 பேர் காயமடைந்தனர். இதுகுறித்து அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று காயம் அடைந்தவர்களை மீட்டு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதுகுறித்து வழக்குபதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.