சென்னை மாவட்டத்தில் உள்ள அம்பத்தூர் மேனாம்பேடு பிள்ளையார் கோவில் தெருவில் ராஜி என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் அப்பகுதியில் இருக்கும் பூங்கா எதிரில் உள்ள சாலையை கடந்து செல்ல முயன்றார். அப்போது அந்த வழியாக வேகமாக வந்த கார் ராஜி மீது மோதியது. இந்த விபத்தில் படுகாயமடைந்த ராஜி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.

இதுகுறித்து அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று ராஜியின் உடலை மீட்டு அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இதுபற்றி வழக்குபதிவு செய்த போலீசார் கார் டிரைவரான சஞ்சீவி ராவ் என்பவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.