விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள ஓமந்தூர் கிராமத்தில் விவசாயியான கோவிந்தராஜன் என்பவர் வசித்து வருகிறார். இவரது மகள் ரமணி கடந்த ஆண்டு எழுதிய பிளஸ் 2 தேர்வில் ஆங்கில பாடத்தில் மட்டும் தேர்ச்சி பெறவில்லை. கடந்த மார்ச் மாதம் நடந்த பொதுத் தேர்வில் ரமணி ஆங்கில பாடத்தை மட்டும் தனித்தேர்வராக எழுதியுள்ளார். நேற்று காலை வெளியான தேர்வு முடிவை ரமணி செல்போன் மூலம் பார்த்துள்ளார்.

அப்போது ஆங்கில பாடத்தில் மீண்டும் தோல்வி அடைந்ததால் மன உளைச்சலில் இருந்த ரமணி தனது வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளார். இதனையடுத்து வீட்டிற்கு வந்த பெற்றோர் ரமணி தூக்கில் சடலமாக தொங்குவதைக் கண்டு கதறி அழுதனர். இதுபற்றி அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று ரமணியின் உடலை மீட்டு அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்துள்ளனர். இதுகுறித்து வழக்குபதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.