கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள ஜவனசந்திரம் கிராமத்தில் முனிராஜ் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு மஞ்சுளா என்ற மனைவி இருந்துள்ளார். இந்த தம்பதியினருக்கு 2 மகன்கள் இருக்கின்றனர். இந்நிலையில் மஞ்சுளா தனது மகனுக்கு தவணைத் தொகை செலுத்தும் முறையில் மோட்டார் சைக்கிளை புதிதாக வாங்கி கொடுத்துள்ளார். இதனையடுத்து தவணைத் தொகை கட்டுவது தொடர்பாக குடும்பத்தினரிடையே தகராறு ஏற்பட்டது.

இதனால் மன உளைச்சலில் இருந்த மஞ்சுளா தனது வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளார். இதுகுறித்து அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று மஞ்சுளாவின் உடலை மீட்டு அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் குறித்து வழக்குபதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.