புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள மைக்கேல் பட்டியில் தேவநேசன் என்பவர் வசித்து வருகிறார் இவருக்கு ஜோஸ் ஆஸ்லி என்ற மகள் உள்ளார். இவர் பி.எட் படித்து முடித்துள்ளார். கடந்த 12-ஆம் தேதி தனது மகள் காணாமல் போனதாக தேவநேசன் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இதுகுறித்து வழக்குபதிவு செய்த போலீசார் நடத்திய விசாரணையில், ஜோஸ் ஆஸ்லி தஞ்சாவூர் மாவட்டத்தைச் சேர்ந்த லெனின் என்பவரை காதலித்தது தெரியவந்தது.

சம்பவம் நடைபெற்ற அன்று ஜோஸ் வீட்டை விட்டு வெளியேறி தனது காதலனை திருமணம் செய்து கொண்டார். இதனையடுத்து பாதுகாப்பு கேட்டு இருவரும் ஆலங்குடி காவல் நிலையத்தில் தஞ்சம் அடைந்தனர். பின்னர் போலீசார் இரு வீட்டாரையும் அழைத்து பேச்சுவார்த்தை நடத்தி புதுமண தம்பதியினரை அனுப்பி வைத்தனர்.