சேலம் மாவட்டத்தில் உள்ள பச்சைப்பட்டி பகுதியில் கிருபா என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு சந்தியா என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதியினர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு மண்ணெண்ணெய் ஊற்றி தீக்குளிக்க முயன்றனர். இதனை பார்த்து அதிர்ச்சியடைந்த போலீசார் அவர்களை தடுத்து நிறுத்தி விசாரணை நடத்தினர்.

அந்த விசாரணையில் கிருபா கூறியதாவது, நான் அம்மாபேட்டையில் இருக்கும் தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்த போது சக ஊழியர்கள் 3 பேர் கடன் கேட்டனர். இதனால் அவர்களுக்கு 7 லட்சம் ரூபாய் கொடுத்தேன். ஆனால் கூறியபடி அவர்கள் பணத்தை திரும்பி தரவில்லை. மேலும் பணம் கொடுக்க மறுப்பு தெரிவித்து கொலை மிரட்டல் விடுகின்றனர். இதனால் எனது மனைவியுடன் தற்கொலைக்க முயன்றேன் என கூறியுள்ளார். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.