மேற்குவங்க மாநிலத்தில் இரண்டு வெவ்வேறு அரசு மருத்துவமனைகளில் அடினோ வைரஸ் ஆல் பாதிக்கப்பட்ட ஒன்பது மாத குழந்தை உட்பட ஐந்து குழந்தைகள் சுவாசத் தொற்றினால் மூச்சு திணறல் ஏற்பட்டு உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அதில் இரண்டு குழந்தைகள் கொல்கத்தா அரசு மருத்துவமனையிலும் மூன்று குழந்தைகள் பிசி ராய் அரசு குழந்தை நல மருத்துவர் அறிவியல் கல்லூரியிலும் சிகிச்சை பெற்று வந்துள்ளன. இருந்தாலும் உயிரிழந்த குழந்தைகளின் மருத்துவ பரிசோதனை அறிக்கை வெளிவந்த பிறகு தான் இது உறுதி செய்யப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.