ஈரோடு மாவட்டத்திலுள்ள பெருந்துறை அருகே தனியார் கல்லூரி அமைந்துள்ளது. இந்த கல்லூரியில் படிக்கும் மாணவ, மாணவிகளை ஏற்றி கொண்டு திருப்பூர் சுற்றுவட்டார பகுதியில் இருந்து கல்லூரி பேருந்து கல்லூரி நோக்கி சென்று கொண்டிருந்தது. இந்நிலையில் மேட்டுபுதூர் பகுதியில் இருக்கும் வளைவில் திரும்ப முயன்ற போது ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த பேருந்து சாலையில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.

இந்த விபத்தில் மாணவர் மாணவிகள் உள்பட 17 பேர் காயம் அடைந்தனர். அதில் 5 பேர் படுகாயம் அடைந்தனர். அவர்களை அக்கம் பக்கத்தினர் மீட்டு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். இதுகுறித்து அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விபத்தில் சிக்கிய கல்லூரி பேருந்தை அப்புறப்படுத்தி போக்குவரத்தை சரி செய்தனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.