கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள கொடுகூரில் மாவட்ட அரசு அருங்காட்சியகமும் வரலாற்று ஆய்வு மற்றும் ஆவணப்படுத்தும் குழுவும் ஆய்வு மேற்கண்டனர். அப்போது ஆசிரியர் ஸ்ரீராமனின் வீட்டிற்கு முன்பு இருக்கும் இடத்தில் கவிழ்ந்த நிலையில் இருந்த நடுக்கல் மற்றும் கல்வெட்டை கண்டறிந்தனர்.

இதுகுறித்த மாவட்ட அரசு அருங்காட்சியக காப்பாட்சியர் கோவிந்தராஜ் கூறியதாவது, இந்த கல்வெட்டு சுமார் 700 ஆண்டுகளுக்கு முன்பு ஜெயங்கொண்ட சோழ முரசு நாட்டை ஆட்சி செய்த குறுவேந்த மன்னனான பகைவர் கண்ட மாராயணம் இந்த ஊரை அழிக்க வரும்போது அவனை வழிமறித்த சண்டையில் சோமேசு என்பவர் இறந்த செய்தியை கல்வெட்டு தெரிவிக்கிறது.

நடு கல்லில் வீரன் ஒரு கையில் வாளும், மறு கையில் வில்லும் வைத்திருக்கிறான். அவரது உடம்பில் இரண்டு அம்புகள் தைத்து செல்கிறது. இறந்த பிறகு தேவலோக மங்கைகள் அவனை சொர்க்கத்திற்கு அழைத்து செல்லும் காட்சியும் நடுக்கடலின் மேல் புறத்தில் கட்டப்பட்டிருக்கிறது என கூறியுள்ளார்.