திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள புதுப்பேட்டையில் சரஸ்வதி என்பவர் வசித்து வருகிறார். கடந்த 2 நாட்களுக்கு முன்பு அந்த பகுதியில் இடி, மின்னலுடன் கூடிய கனமழை பெய்தது. இந்நிலையில் கொட்டையில் கட்டி வைத்திருந்த சரஸ்வதிக்கும் சொந்தமான 2 மாடுகள் மீது இடி விழுந்தது. இதனால் மாடுகள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தது.

இதனை பார்த்து அதிர்ச்சியடைந்த சரஸ்வதி கதறி அழுதார். இதுகுறித்து அறிந்த அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு சென்று மாடுகளின் உடலை பிரேத பரிசோதனை செய்தனர். இதுகுறித்து  அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.