திருச்சி மாவட்டத்தில் உள்ள கொங்குநாடு பொறியியல் கல்லூரியில் தமிழ்நாடு பள்ளி கல்வித்துறை சார்பில் இரண்டாவது மாநில குடியரசு தின விழா குழு போட்டிகள் நடைபெற்றது. இதில் தூத்துக்குடி மாவட்டம் சார்பாக கோவில்பட்டி லட்சுமி மில் மேல்நிலைப்பள்ளி மாணவிகள் அணி கலந்து கொண்டது.

இந்நிலையில் 14 வயதிற்கு உட்பட்டோர் கைப்பந்து போட்டியில் கலந்து கொண்ட மாணவிகள் 3-வது இடத்தை பிடித்து வெண்கல பதக்கத்தை வென்றனர். இதனையடுத்து வெற்றி பெற்ற மாணவிகளை உடற்கல்வி ஆசிரியர்கள் பீட்டர், ரவி தாமஸ், மகேஸ்வரி, பள்ளியின் தலைமை ஆசிரியர் சண்முகராஜ் உள்ளிட்ட பலர் பாராட்டியுள்ளனர்.