சனாதனத்திற்கு எதிராக திமுக தொடர்ந்து பேசுவதற்கு ராகுல,  சோனியா காந்தியே காரணம் என பாஜக தேசிய தலைவர் ஜே.பி நட்டா புகார் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக தனது ட்விட்டர் X பக்கத்தில், ஐ.என்.டி.ஐ கூட்டணியின் மும்பை கூட்டத்திற்கு இரண்டு நாட்களுக்குப் பிறகு உதயநிதி ஸ்டாலின் அறிக்கை, பின்னர் பிரியங்க் கார்கே சனாதன் மீது தாக்குதல் மற்றும் இன்று தி.மு.க அமைச்சர் சனாதன தர்மத்திற்கு எதிராக தான் ஐ.என்.டி.ஐ கூட்டணி உருவானது என்பதை உறுதிபடுத்தி உள்ளது.

திமுகவினரின் இந்த பேச்சிகள் எல்லாம் . சோனியா காந்தி, ராகுல் மற்றும் காங்கிரஸ்.திட்டத்தின்  ஒரு பகுதியாகும். இந்த குறித்து காங்கிரஸ் மற்றும் ஐ.என்.டி.ஐ கூட்டணி தங்கள் கருத்தை தெளிவுபடுத்த வேண்டும்.

எந்த மதத்தைப் பற்றியும் சர்சைக்குரிய வகையில் கருத்துக்களை சொல்லலாம் என  அரசியலமைப்பில் உரிமை உள்ளதா? I.N.D.I கூட்டணியினருக்கு அரசியலமைப்பு பற்றி தெரியாதா?ஐ.என்.டி.ஐ கூட்டணியும், காங்கிரஸும், சோனியாவும், ராகுலும் சனாதன தர்மத்தின் மீதான வெறுப்புபே திமுக பேச்சிக்கு காரணம் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.