தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடர் நேற்று ஆளுநர் உரையுடன் தொடங்கிய நிலையில் சுமார் 40 நிமிடங்கள் பேசிய ஆளுநர் தமிழக அரசு தயாரித்த அனுப்பிய உரையில இருந்த பாதி வார்த்தைகளை நிராகரித்தும் தானாக சில வார்த்தைகளை சேர்த்தும் பேசினார். குறிப்பாக தமிழ்நாடு கவர்மெண்ட் என்று சொல்வதற்கு பதிலாக திஸ் கவர்மென்ட் என்று ஆரம்பித்த ஆளுநர் தமிழ்நாடு அமைதி பூங்கா என்ற வார்த்தையை சொல்ல தவிர்த்தது ஆளும் கட்சி உட்பட எதிர்கட்சிகளுக்கும் கோபத்தை ஏற்படுத்தியது. அதன் பிறகு அம்பேத்கர், காமராஜர், அண்ணா, பெரியார், திராவிட மாடல் போன்ற வார்த்தைகளையும் ஆளுநர் தன் உரையில் இருந்து தவிர்த்து விட்டார்.

இது திமுக கூட்டணி கட்சிகளுக்கு கோபத்தை ஏற்படுத்தவே ஆளுநருக்கு எதிராக முழக்கங்கள் எழுப்பியதோடு  சில கட்சிகள் அவையை விட்டும் வெளியேறியது. அதன் பிறகு ஆளுநர் பேசிக் கொண்டிருக்கும் போதே சில வார்த்தைகளை ஆளுநர் தவறவிட்டதால் கோபத்தில் முதல்வர் ஸ்டாலின் எழுந்து ஆளுநரின் உரையை உடனடியாக நீக்கி தீர்மானம் நிறைவேற்ற வேண்டும் என்று கூற அதன்படி தீர்மானமும் நிறைவேற்றப்பட்டது. இந்த தீர்மானம் நிறைவேற்றப்பட்டவுடன் தேசிய கீதம் ஒலிப்பதற்கு முன்பாகவே ஆளுநர் அவையை விட்டு வெளியேறி விட்டார். இதற்கு தற்போது கண்டனங்கள் வலுத்து வருகிறது.

இந்நிலையில் நடவடிக்கைகள் நிறைவேற்றப்பட்டதாக சபாநாயகர் அறிவித்து தேசிய கீதம் தான் ஒலிக்கப்பட்ட பிறகு தான் ஆளுநர் முறைப்படி அவையை விட்டு வெளியேற வேண்டும். ஆனால் ஆளுநர் இந்த 2 மரபுகளையும் மீறியதால், தமிழக முதல்வர் ஸ்டாலினும் சபாநாயகர் அப்பாவும் என்ன தண்டனை கொடுக்கப் போகிறார்கள் என்று பலரும் கேள்வி எழுப்பி வருகிறார்கள். மேலும் ஆளுநர் பேசும்போது யாரும் குறுக்கே பேசக்கூடாது என்ற ஒரு மரபு இருக்கும் நிலையில், முதல்வர் ஸ்டாலின் ஆளுநர் பேசும்போது உடனடியாக குறுக்கே பேசியதும் மரபை மீறிய செயல்தான் என்று எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டி வருகிறது என்பதும் குறிப்பிடத்தக்கதாகும்.