விருதுநகர் மாவட்டத்தில் உள்ள வேட்டை பெருமாள் கோவில் பகுதியில் பாலசுப்பிரமணியன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு ஜோதி என்ற மனைவி உள்ளார். இந்நிலையில் வீட்டில் இருக்கும் பிளாஸ்டிக் டிரம்மில் பாலசுப்பிரமணியன் நெல் சேகரித்து வைத்திருந்தார். நேற்று ஜோதி வீட்டை சுத்தம் செய்த போது குழந்தைகள் டிரம்மின் அருகே விளையாடிக் கொண்டிருந்தனர். இதனையடுத்து டிரம்மில் இருந்து ஏதோ சத்தம் வருவதை கேட்ட ஜோதி மூடியை திறந்து பார்த்துள்ளார்.

அப்போது நெல் மணிகள் மேல் பாம்பு பதுங்கி இருப்பதை கண்டு அதிர்ச்சியடைந்த ஜோதி உடனடியாக தனது குழந்தைகளுடன் வீட்டை விட்டு வெளியேறினார். இதுகுறித்து தகவல் அறிந்த தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று 5 அடி நீளமுள்ள நல்ல பாம்பை பிடித்து மேற்கு தொடர்ச்சி மலையடிவார பகுதியில் கொண்டு விட்டனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.