திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள வில்பட்டி ஐந்து வீடு பகுதியில் அஜித்குமார் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் கள்ளக்குறிச்சியில் 108 ஆம்புலன்ஸ் டிரைவராக வேலை பார்த்து வந்துள்ளார். கடந்த ஆண்டு அஜித்குமாருக்கு திருமணம் நடைபெற்றது. இந்நிலையில் சொந்த ஊருக்கு திரும்பி வந்த அஜித்குமார் தனது பெற்றோரிடம் டிரைவர் வேலை பிடிக்கவில்லை என கூறியுள்ளார்.

ஆனால் பெற்றோர் அவரை வேலைக்கு செல்ல கட்டாயபடுத்தியதாக தெரிகிறது. இதனால் மன உளைச்சலில் இருந்த அஜித்குமார் தனது வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளார். இந்த சம்பவம் குறித்து வழக்குபதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.