ஈரோடு மாவட்டத்தில் உள்ள ஓட்டபாளையம் பகுதியில் நந்தகுமார் என்பவர் வசித்து வருகிறார். இவரது வீட்டிற்கு முன் பகுதியில் இருக்கும் அறையில் பாம்பு நுழைந்தது. இதனை பார்த்து அதிர்ச்சியடைந்த குடும்பத்தினர் அலறியடித்துக் கொண்டு ஓட்டம் பிடித்தனர். இதுகுறித்து அறிந்த தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு சென்று சுமார் 5 அடி நீளமுள்ள நாகப்பாம்பை லாவகமாக பிடித்தனர்.

இதனையடுத்து பாம்பு வனத்துறையினரிடம் ஒப்படைக்கப்பட்டது. பின்னர் வனத்துறையினர் அந்த பாம்பை அந்தியூர் வனப்பகுதியில் கொண்டு விட்டனர். இந்த சம்பவம் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.