நீலகிரி மாவட்டத்தில் உள்ள பந்தலூர் பகுதியில் தொடர்ந்து மழை பெய்து கொண்டிருக்கிறது. இதனால் அத்திகுன்னா ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. நேற்று அத்திகுன்னா பகுதியில் இருக்கும் தேயிலை தோட்டத்தில் கூலி தொழிலாளியாக பணிபுரியும் அசாம் மாநிலத்தைச் சேர்ந்த முகமதுவின் மகன் சாபிக் ஆற்றில் குளித்து கொண்டிருந்தான். இந்த சிறுவன் வெள்ளப்பெருக்கில் அடித்து செல்லப்பட்டார். இதனை பார்த்து அதிர்ச்சியடைந்த பொதுமக்கள் சிறுவனை காப்பாற்ற முயற்சி செய்தும் அவர்களால் முடியவில்லை.

இதனையடுத்து மத்திய துணை ராணுவ படை வீரரான ஜேம்ஸ் என்பவர் ஆற்றில் நீண்ட தூரம் நீந்தி சென்று சிறுவனை பத்திரமாக மீட்டு கரைக்கு கொண்டு வந்தார். பின்னர் சிறுவன் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டான். துரிதமாக செயல்பட்டு சிறுவனை காப்பாற்றிய ஜேம்சை பந்தலூர் தாசிலர் கிருஷ்ணமூர்த்தி போலீசார் மற்றும் பொதுமக்கள் பாராட்டியுள்ளனர். இந்த சம்பவத்தை தொடர்ந்து அத்திகுன்னம் ஆற்றில் குளிப்பதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.