தென்காசி மாவட்டத்தில் உள்ள முதலியார்பட்டியில் முகமது அமீன் என்பவர் வசித்து வருகிறார். இவரது மகன் முகமது பீர் மைதீன்(12) அரசு மேல்நிலைப் பள்ளியில் 7- ஆம் வகுப்பு படித்து வந்துள்ளான். கடந்த 17-ஆம் தேதி மதியம் மைதீன் வீட்டிலிருந்த பூச்சி மருந்தை குளிர்பானம் என நினைத்து குடித்துக் கொண்டிருந்தான். இதனை பார்த்த சிறுவனின் தாயார் பானு ஓடி வந்து பூச்சி மருந்தை தட்டிவிட்டார்.

இதனையடுத்து பானு மகனை தென்காசி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தார். பின்னர் மேல் சிகிச்சைக்காக சிறுவன் பாளையங்கோட்டை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி மைதீன் பரிதாபமாக உயிரிழந்தான். இதுகுறித்து வழக்குபதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.