விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள கொண்ட சமுத்திரபாளையம் கிராமத்தில் கூலி வேலை பார்க்கும் சேகர் என்பவர் வசித்து வருகிறார். கடந்த 2016-ஆம் ஆண்டு அதே கிராமத்தில் வசிக்கும் ஒரு பெண் குளித்துக் கொண்டிருந்ததை சேகர் பார்த்துள்ளார். இதனை தட்டிக்கேட்ட அந்த பெண்ணை பழிவாங்கும் நோக்கத்தில், சேகர் அந்த பெண்ணின் 12 வயது மகளை கடத்தி சென்று கல்லால் பலமாக தாக்கி பாலியல் பலாத்காரம் செய்துள்ளார்.

மேலும் சிறுமியை கொலை செய்து உடலை பள்ளம் தோண்டி புதைத்தார். இது தொடர்பான வழக்கு விழுப்புரம் சிறப்பு நீதிமன்றத்தில் நடந்தது. இந்த வழக்கினை விசாரித்த நீதிபதி சாந்தி சேகருக்கு சாகும் வரை சிறை தண்டனையும், பத்தாயிரம் ரூபாய் அபராதமும் விதித்து உத்தரவிட்டார். மேலும் பாதிக்கப்பட்ட சிறுமியின் குடும்பத்திற்கு அரசு சார்பில் 10 லட்ச ரூபாய் வழங்க வேண்டும் எனவும் உத்தரவிட்டார்.