புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள வயலோகத்தில் நடராஜன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு பாலசுப்பிரமணியன்(13) என்ற மகன் இருந்துள்ளார். இந்நிலையில் நடராஜன் கல்லாலங்குடியில் இருக்கும் உறவினர் வீட்டு துக்க நிகழ்ச்சிக்கு குடும்பத்தினருடன் சென்றுள்ளார். அதே பகுதியில் கிருஷ்ணமூர்த்தி என்பவர் வசித்து வருகிறார். கிருஷ்ணமூர்த்திக்கு ஜான்சி என்ற மகளும், லெனின் என்ற மகனும் இருக்கின்றனர். இந்நிலையில் பாலசுப்பிரமணியன் குளிப்பதற்காக கிருஷ்ணமூர்த்தியின் வீட்டிற்கு சென்றுள்ளார்.

அப்போது எதிர்பாராதவிதமாக மின் கம்பியை தொட்டதால் சுப்பிரமணியன் மீது மின்சாரம் பாய்ந்தது. இதனை பார்த்த ஜான்சியும், லெனினும் சுப்பிரமணியனை காப்பாற்ற முயற்சி செய்தனர். அப்போது மூன்று பேர் மீதும் மின்சாரம் பாய்ந்தது. இதனால் படுகாயம் அடைந்த மூன்று பேரையும் அக்கம் பக்கத்தினர் மீட்டு ஆலங்குடி அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். அங்கு சுப்பிரமணியனை பரிசோதனை செய்த டாக்டர் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்துள்ளார். இதுகுறித்து வழக்குபதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.