போதையற்ற தமிழ்நாடு என்னும் தலைப்பில் தமிழகத்தில் போதை பொருட்களை ஒழிக்க வலியுறுத்தி இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் சார்பாக ஒரு கோடி கையெழுத்து இயக்கம் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. அந்த வகையில் நாகப்பட்டினம் மாவட்டத்தில் உள்ள சிக்கல் கடை தெருவில் இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் சார்பாக கையெழுத்து இயக்கம்  நிகழ்ச்சி நடைபெற்றது.

இந்த நிகழ்ச்சிக்கு ஒன்றிய செயலாளர் சிந்தன் தலைமை தாங்கி பேசியுள்ளார். மேலும் மாவட்ட துணைத் தலைவர் மாலா முன்னிலை வகித்துள்ளார். அதேபோல் சிக்கல் அரசு பள்ளி உதவி தலைமை ஆசிரியர் புஷ்பா நிகழ்ச்சியை தொடங்கி வைத்துள்ளார். தீண்டாமை ஒழிப்பு முன்னணி மாவட்ட செயலாளர் சுபாஷ் சந்திர போஸ், ஊராட்சி மன்ற தலைவர் விமலா ராஜா உள்ளிட்ட பலர் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.