திருச்சி மாவட்டத்தில் உள்ள முசிறி சடையப்பன் பகுதியில் சாமிநாதன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு லோகநாதன் என்ற மகனும், சுபாஷினி என்ற மகளும் இருக்கின்றனர். இந்நிலையில் சுபாஷினி முருகையா என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இந்த தம்பதியினருக்கு சஞ்சனா ஸ்ரீ, சாதனா ஸ்ரீ என்ற இரட்டை குழந்தைகள் இருந்துள்ளனர். இந்நிலையில் டிபன் கடை நடத்தி வரும் சுபாஷினி மற்றும் அவரது கணவரால் 2 குழந்தைகளையும் பராமரிக்க இயலவில்லை. இதனால் சாதனா ஸ்ரீயை முசிறியில் இருக்கும் தனது தந்தை வீட்டில் விட்டுவிட்டு சஞ்சனா ஸ்ரீயை சுபாஷினி தன்னுடன் வைத்து வளர்த்து வந்துள்ளார்.

கடந்த 2018-ஆம் ஆண்டு லோகநாதனுக்கும், சாமிநாதனுக்கும் இடையே சொத்து பிரிவதில் தகராறு ஏற்பட்டது. இதில் கோபமடைந்த லோகநாதன் இந்த பிரச்சனைக்கு சுபாஷினியின் குழந்தை தான் காரணம் என திட்டி சாதனா ஸ்ரீயை தூக்கி கட்டிலில் அடித்ததால் குழந்தை பரிதாபமாக உயிரிழந்தது. இதுகுறித்து வழக்குபதிவு செய்த போலீசார் லோகநாதனை கைது செய்தனர். இந்த வழக்கினை விசாரித்த திருச்சி முதலாவது கூடுதல் அமர்வு நீதிமன்றம் லோகநாதனுக்கு ஆயுள் தண்டனையும், 3000 ரூபாய் அபராதமும் விதித்து உத்தரவு பிறப்பித்தது.