கோயம்புத்தூர் மாவட்டத்திலுள்ள நீலிகோணம் பாளையம் ஆர்.கே நகரில் தெய்வசிகாமணி என்பவர் வசித்து வருகிறார். இவரது மனைவிக்கு கடந்த 8 நாட்களுக்கு முன்பு ஆண் குழந்தை பிறந்தது. இந்நிலையில் தெய்வசிகாமணியின் மனைவி குழந்தைக்கு தாய்ப்பால் கொடுத்துக் கொண்டிருந்தபோது திடீரென மூச்சு திணறல் ஏற்பட்டது.

இதனால் மயங்கிய குழந்தையை அருகில் இருக்கும் தனியார் மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர். அங்கு குழந்தையை பரிசோதித்த டாக்டர் குழந்தை ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்துள்ளனர். இதுகுறித்து வழக்குபதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.