சேலம் மாவட்டத்தில் உள்ள மாட்டையாம்பட்டி பகுதியில் விசைத்தறி தொழிலாளியான கிருஷ்ணன்(54) என்பவர் வசித்து வருகிறார். இவர் 10 ஆண்டுகளுக்கு மேலாக தனது மனைவியை பிரிந்து வாழ்கிறார். இந்நிலையில் அதே பகுதியில் வசிக்கும் பட்டதாரியான விமலா(24) கிருஷ்ணனின் வீட்டிற்கு அடிக்கடி சென்று வந்தபோது இருவருக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டு காதலாக மாறியது. ஒரு கட்டத்தில் இருவரும் வீட்டை விட்டு வெளியேறி திருவண்ணாமலைக்கு சென்று திருமணம் செய்து கொண்டனர்.

இதற்கிடையே விமலாவின் தந்தை அய்யம்பெருமாள் தனது மகளை கிருஷ்ணன் கடத்தி சென்றதாக காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இதனை அறிந்த தம்பதியினர் பாதுகாப்பு கேட்டு காவல் நிலையத்தில் தஞ்சம் அடைந்தனர். அங்கே விமலாவின் உறவினர்களும், பெற்றோரும் தங்களுடன் திரும்பி வர கட்டாயப்படுத்தியுள்ளனர். அதற்கு விமலா மறுப்பு தெரிவித்ததால் இருவரையும் விருப்பப்படி வாழலாம் என கூறி போலீசார் அனுப்பி வைத்தனர். 54 வயது நபரை 24 வயது பட்டதாரி பெண் கரம் பிடித்த சம்பவம் வைரலாகி வருகிறது.