தமிழகத்தில் கல்லூரி உதவி பேராசிரியர் பணிக்கான தகுதித்தேர்வு (SLET) ஆண்டுதோறும் நடத்தப்படும் என்று உயர்கல்வித்துறை தரப்பில் தெரிவிக்கப்படுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இது குறித்து தமிழ்நாடு உயர்கல்வித்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில், “கல்லூரி உதவிப் பேராசிரியர் பணியிடங்களுக்கான தகுதித்தேர்வு (SLET) இனி ஆண்டுதோறும் நடத்தப்படும்.

வழக்கு நீதிமன்றத்தில் விரைவில் தீர்வை எட்டும் நிலையில் 4,000 பணியிடங்களுக்கான தேர்வு உடனடியாக நடத்தப்படும்” என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், 5 ஆண்டுகளாக SLET தேர்வுகள் நடத்தப்படாதது குறிப்பிடத்தக்கது.