தமிழக காவல்துறையின் புதிய DGPஆக சங்கர் ஜிவாலை நியமித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. தற்போதைய DGP சைலேந்திர பாபு நாளையுடன் ஓய்வு பெறும் நிலையில், சென்னை காவல் ஆணையராக உள்ள சங்கர் ஜிவால் புதிய DGPஆக நியமனம் செய்யப்பட்டுள்ளார். 1990ல் IPS அதிகாரியான சங்கர் ஜிவால், உத்தரகாண்ட் மாநிலத்தை சேர்ந்தவர் ஆவார். இவர், உளவுப்பிரிவு டிஐஜி, ஐஜி,சிறப்பு அதிரடிப்படை ஏடிஜிபி உள்ளிட்ட பொறுப்புகளை வகித்துள்ளார்