பெரம்பலூர் அருகே Tattoo குத்தியதால் கல்லூரி மாணவர் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பெரம்பலூர் அருகே கல்லூரி மாணவர் பரத் (22) கழுத்துப் பகுதியில் Tattoo குத்தியதால் உடல்நிலையில் பாதிப்பு ஏற்பட்டு, சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். Tattoo குத்திய இடத்தில் கட்டி உருவாகி வலி அதிகரித்ததால், மருத்துவமனையில் அறுவை சிகிச்சை செய்து கட்டி அகற்றப்பட்டுள்ளது.

இருப்பினும் சிகிச்சை பலனளிக்காததால் பரத் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. மேலும், கல்லூரி மாணவர்கள் மற்றும் உறவினர்கள் அவரது உடலுக்கு அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.