சிறுமியை திருமணம் செய்து கொள்வதாக ஆசை வார்த்தை கூறி பாலியல் பலாத்காரம் செய்த வழக்கில் கடந்த 2021-ம் ஆண்டு பூபதி (25) என்ற வாலிபர் போக்சோ வழக்கில் கைதானார். இந்த வாலிபர் சிறையில் இருந்து தற்போது வெளியே வந்த நிலையில், பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட சிறுமியின் உறவினர்கள் பூபதியை அடித்து கொலை செய்துள்ளனர். இந்த வாலிபரின் சடலம் காஞ்சி கோயிலில் இருந்து சித்தோடு செல்லும் வழியில் சுரட்டுப்பாளையம் என்ற இடத்தில் கிடந்துள்ளது.

இந்த சடலத்தை அவ்வழியே சென்ற சிலர் பார்த்து காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். அந்த தகவலின் படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற காவல்துறையினர் வாலிபரின் சடலத்தை மீட்டு பிரதே பரிசோதனைக்காக அனுப்பி வைத்துள்ளனர். இது குறித்து வழக்குப்பதிவு செய்து காவல்துறையினர் மேற்கொண்ட விசாரணையில் பாதிக்கப்பட்ட சிறுமியின் உறவினர்கள் பூபதியை அடித்து கொலை செய்தது தெரிய வந்தது. மேலும் இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.