அமைச்சர் செந்தில் பாலாஜி ஜாமீன் கோரிய மனு சென்னை மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வருகிறது. சென்னை உயர்நீதிமன்றத்தின் உத்தரவை தொடர்ந்து சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு பட்டியல் இடப்பட்டுள்ளது. ஜாமீன் மனு மட்டும் இன்றி முழு வழக்கையும் முதன்மை அமர்வு நீதிமன்றமே விசாரிக்க வேண்டும் என உயர் நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.