வரும் ஜனவரி 26-ம் தேதி நாட்டின் 74-வது குடியரசு தின விழா விமர்சையாக கொண்டப்பட இருகிறது. இந்நிலையில் பல்வேறு மாவட்டங்களில் அதற்கான ஏற்பாடுகள் துரிதப்படுத்தப்பட்டு வருகிறது. அதோடு குடியரசு தினம் அன்று அசம்பாவிதம் ஏற்படாமல் இருக்க பாதுகாப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது. அதன்படி ஏகப்பட்ட காவல்துறையினர் ரயில் நிலையங்களில் குவிக்கப்பட்டு உள்ளனர்.

அதுமட்டுமின்றி பயணிகள் பலத்த சோதனைக்கு பிறகே ரயில் நிலையங்களுக்கு அனுமதிக்கப்படுகின்றனர். மேலும் சென்னையில் குடியரசு தினம் அன்று ஞாயிறு அட்டவணையின் அடிப்படையில் அங்கு புறநகர் ரயில்களானது இயக்கப்படும் என்று தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. இதன் காரணமாக பயணிகள் எவ்வித தடையும் இன்றி வழக்கம்போல பயணம் மேற்கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.