தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள பர்மா பஜார் பகுதியில் கடந்த 1986 ஆம் ஆண்டு கடை வைப்பதற்கு அரசு சார்பில் அனுமதி வழங்கப்பட்டது. அங்கு 106 வியாபாரிகள் கடந்த 31 ஆண்டுகளாக கடை வைத்துள்ளனர். நேற்று முன் அறிவிப்பு இல்லாமல் மாநகராட்சி உதவி பொறியாளர் கண்ணதாசன் தலைமையில் போலீசார் பொக்லைன் இயந்திரம் மற்றும் லாரிகளை எடுத்து வந்து கடைகளை அகற்றுவதற்கு முயற்சி செய்துள்ளனர்.

இதற்கு எதிர்ப்பு தெரிவித்து வியாபாரிகள் போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. இதனையடுத்து அதிகாரிகள் வியாபாரிகளிடம் பேச்சுவார்த்தை நடத்தியும் முடிவு எட்டப்படவில்லை. இதனால் அங்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.