திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள திருநின்றவூர் நகராட்சி பெரியார் நகர், முத்தமிழ் நகர், கம்பர் தெரு, பாரதியார் தெரு உள்ளிட்ட குடியிருப்பு பகுதிகளில் மழை நீர் தேங்கி உள்ளது. அதனை ராட்சத மோட்டார்கள் மூலமாக அப்புறப்படுத்தும் பணிகள் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.

இந்நிலையில் திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் பிரபு சங்கர், நகராட்சி நிர்வாக இயக்குனர் சிவராசு ஆகியோர் மழைநீர் வடிக்கும் பணிகளை ஆய்வு செய்தனர். இந்த பணிகளை விரைந்து முடிக்க நகராட்சி அலுவலர்களுக்கும், பொதுப்பணித்துறை அலுவலர்களுக்கும் மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டார். முன்னதாக மத்திய குழு திருவள்ளூர் மற்றும் காஞ்சிபுரம் பகுதிகளில் மழை வெள்ளம் குறித்து ஆய்வு செய்தது குறிப்பிடத்தக்கதாகும்.