நாகப்பட்டினம் மாவட்டத்தில் உள்ள நம்பியார் நகரில் ஜெயபால் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு ஐஸ்வர்யா என்ற மகள் உள்ளார். இவர் தூத்துக்குடி மீன்வளக் கல்லூரியில் இளநிலை மீன்வள அறிவியல் படிப்பில் முதல் மாணவியாக தேர்ச்சி பெற்றுள்ளார். மேலும் ஐஸ்வர்யா 14 பதக்கங்களை பெற்று சாதனை படைத்துள்ளார்.

இந்நிலையில் பல்வேறு தரப்பினர் ஐஸ்வர்யாவை பாராட்டியுள்ளனர். மேலும் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஹர்ஷ் சாதனை படைத்த ஐஸ்வர்யாவை நேரில் அழைத்து பாராட்டியுள்ளார். இதுபோன்ற சாதனைகளை மென்மேலும் படைக்க ஐஸ்வர்யாவை ஊக்குவித்து கௌரவப்படுத்தினார்.