நீலகிரி மாவட்டத்தில் உள்ள கூடலூர் அருகே இருக்கும் கிராமத்தில் வசிக்கும் 15 வயது சிறுமி அரசு பள்ளியில் பத்தாம் வகுப்பு படித்து வருகிறார். நேற்று முன்தினம் பள்ளி முடிந்து வீட்டிற்கு சென்று கொண்டிருந்த சிறுமிக்கு ஒரு வாலிபர் பாலியல் தொந்தரவு அளித்துள்ளார். இதனால் அதிர்ச்சியடைந்த சிறுமி அந்த வாலிபரிடம் இருந்து தப்பித்து ஓடி வீட்டிற்கு சென்று நடந்தவற்றை தெரிவித்தார்.

இதுகுறித்து சிறுமியின் பெற்றோர் நடுவட்டம் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். அந்த புகாரின் பேரில் வழக்குபதிவு செய்த போலீசார் நடத்திய விசாரணையில் சிறுமிக்கு பாலியல் தொந்தரவு அளித்த வாலிபர் உட்புரூக் பகுதியை சேர்ந்த விஜய்(25) என்பது தெரியவந்தது. அவரை போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்து சிறையில் அடைத்தனர்.