மதுரை மாவட்டத்திலுள்ள கல்லாம்பட்டியில் முகமது மீரான் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு ஷகில் அக்பர்(25) என்ற மகன் உள்ளார். இந்நிலையில் முகநூல் மூலம் ஷகில் அக்தருக்கு திருச்சியைச் சேர்ந்த வடிவேல் என்பவருடன் பழக்கம் ஏற்பட்டது. அவர் வெளிநாட்டு வேலைக்கு ஆள் அனுப்பும் முகவர் நிறுவனம் வைத்து தொழில் செய்து வருவதாக ஷகிலிடம் தெரிவித்தார்.

இதனையடுத்து வெளிநாட்டில் வேலை வாங்கி தருவதாக கூறி ஷகில் அக்பரிடம் இருந்து வடிவேல் 5 லட்ச ரூபாய் பணம் வாங்கியுள்ளார். ஆனால் கூறியபடி வேலை வாங்கி கொடுக்கவில்லை. இதுகுறித்து ஷகில் அக்பர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அந்த புகாரின் பேரில் வழக்குபதிவு செய்த போலீசார் வடிவேலை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.