தர்மபுரி மாவட்டத்தில் உள்ள ஊட்டமலை அரசு மேல்நிலைப் பள்ளியில் 200-க்கும் மேற்பட்ட மாணவர், மாணவிகள் படித்து வருகின்றனர். இந்த பள்ளியில் பத்தாம் வகுப்பு படிக்கும் மாணவன் அதே வகுப்பில் படிக்கும் சக மாணவியை கிண்டல் செய்ததாக தெரிகிறது. இது தொடர்பாக பள்ளி தலைமை ஆசிரியர் பாலாஜி மாணவ, மாணவியை தனது அறைக்கு வரவழைத்து விசாரணை நடத்தினார்.

இதற்கிடையே மாணவியின் உறவினர் ஒருவர் தலைமை ஆசிரியர் அறைக்குள் புகுந்து மாணவனை தாக்கி கொலை மிரட்டல் விடுத்துள்ளார். இதுகுறித்து பள்ளியின் தலைமை ஆசிரியர் பாலாஜி ஒகேனக்கல் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அந்த புகாரின் பேரில் வழக்குபதிவு செய்த போலீசார் சிறுமியின் உறவினரை கைது செய்தனர்.