தேர்தல் பத்திரம் தொடர்பான உச்ச நீதிமன்ற தீர்ப்பை, மதுரை மக்களவை உறுப்பினர் சு. வெங்கடேசன், ஸ்டேட் வங்கியின் தலையில் நீதிமன்றத்தின் சுத்தியல் என விமர்சனம் செய்துள்ளார். இது குறித்து தனது எக்ஸ் பதிவில், நீதியின் மீது நம்பிக்கை ஏற்படுத்தும் தீர்ப்பு. வரவேற்போம் என பதிவிட்டுள்ளார். தேர்தல் பத்திரம் தொடர்பான விபரங்களை நாளை மாலை 5 மணிக்குள் எஸ் பி ஐ வங்கி சமர்ப்பிக்க வேண்டும் என உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.