தமிழகத்தில் மாணவர்கள் தங்களது பள்ளிகளிலேயே ஆதார் கார்டு பெறவும் புதுப்பிக்கவும் பள்ளி கல்வித்துறை ஏற்பாடு செய்துள்ளது. இது தொடர்பான வழிகாட்டு நெறிமுறைகளை அரசு மற்றும் அரசு உதவி பெறும், தனியார் பள்ளிகளுக்கு மாநில திட்ட இயக்குனர் அனுப்பி உள்ளார். இதில் மாணவர்களுக்கு புதிதாக ஆதார் அட்டை எடுப்பது, ஏற்கனவே உள்ள ஆதாரில் திருத்தம் செய்வது போன்ற வசதிகளை பள்ளிகளிலேயே ஏற்படுத்த அறிவுறுத்தப்பட்டுள்ளது.