ஓபிலி கிருஷ்ணா டைரக்டில் சிம்பு, கவுதம் கார்த்திக் நடித்திருக்கும் “பத்து தல” படம் வருகிற மார்ச் 30 ஆம் தேதி வெளியாகிறது. இந்த படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் நடந்தது. இதில் சிம்பு பங்கேற்று பேசியபோது “நான் இங்கே வரும்போது ஒரே விஷயம் தான் மனதில் ஓடியது. அதாவது இந்நிகழ்ச்சியில் அழக்கூடாது என்பது மட்டும் தான் நினைத்தேன். படங்களில் நடிக்கும்போது சென்டிமென்ட்டான காட்சி வந்தால் அழுதுவிடுவேன். எனினும் உங்களுக்காக தான் இன்று அழக்கூடாதுனு நினைத்தேன்.

ஏனெனில் நாம் நிறைய கஷ்டங்களை பார்த்தோம். இனி சந்தோஷமாக இருக்கவேண்டும். எனக்கு தட்டிக்கொடுக்க எனது ரசிகர்கள் மட்டும்தான் இருக்கின்றனர். ஆகவே இனி பெரிதாக பேசுவதற்கெல்லாம் ஒன்றுமில்லை, செயல் மட்டும்தான். இனிமேல் ரசிகர்கள் மகிழ்ச்சியாக இருக்கலாம். இனி நான் என்ன பண்ணுகிறேன் என்பதை மட்டும் பொறுத்திருந்து பாருங்கள். சாதாரணமாக வரவில்லை, வேறு மாதிரி வந்திருக்கிறேன். எனவே இனி உங்களை தலைகுனிய விடமாட்டேன். இப்படத்தில் எனக்கு ஜோடியில்லை. படத்திலும் இல்லை நிஜ வாழக்கையிலும் இல்லை” அவர் பேசினார்.