நடிகர் சிவகார்த்திகேயன், பிரியங்கா மோகன் நடிப்பில் டான் திரைப்படத்தை டைரக்டு செய்தவர் சிபி சக்ரவர்த்தி. இதையடுத்து அவர் ரஜினியை சந்தித்து கதை கூறி இருந்தார். அந்த திரைப்படத்தை லைகா நிறுவனம் தயாரிக்க உள்ளதாகவும் கூறப்பட்டது. எனினும் சில மாதங்களுக்கு பின் அவர் சொன்ன கதை திருப்தியில்லை என ரஜினி தரப்பிலிருந்து சிபி சக்ரவர்த்திக்கு தெரிவிக்கப்பட்டது.

இதன் காரணமாக அதிர்ச்சியடைந்த அவர், ரஜினிக்காக உருவாக்கிய அந்த கதையை இப்போது சிவகார்த்திகேயனை வைத்து இயக்கப்போவதாக ஒரு தகவல் வெளியாகி உள்ளது. மாவீரன் திரைப்படத்தை அடுத்து ராஜ்கமல் பிலிம்ஸ் தயாரிக்கும் படத்தில் நடிக்கும் சிவகார்த்திகேயன், அதன்பின் சிபி சக்ரவர்த்தி இயக்கும் படத்தில் மீண்டும் நடிக்கப்போகிறார் என சொல்லப்படுகிறது.