தமிழ் சினிமாவில் துணை நடிகையாக இருப்பவர் சாந்தி. இவர் சென்னையில் உள்ள மாங்காட்டில் தன்னுடைய கணவர் செல்வராஜ் மற்றும் மகன் பிரகாஷ் வசித்து வருகிறார். நடிகை சாந்திக்கு இரு மகன்கள் மற்றும் ஒரு மகன் இருக்கும் நிலையில் மூத்த மகனுக்கு ஏற்கனவே திருமணம் ஆகி மனைவியுடன் தனியாக வசித்து வருகிறார். அதன் பிறகு மகள் பிரியாவுக்கும் திருமணமான நிலையில் தன் அம்மாவின் வீட்டு பக்கத்திலேயே அவரும் வசித்து வந்துள்ளார். இந்நிலையில் சாந்தியின் இளைய மகனான பிரகாஷ் கஞ்சா போதைக்கு அடிமையாகி உள்ளார். இவருக்கு சற்று மனநலம் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப் பட்டிருந்தார். ஆனால் சிகிச்சைக்கு போதிய அளவு பணம் இல்லாததால் பிரகாஷை வீட்டிற்கு அழைத்து வந்துள்ளனர்.

இந்நிலையில் சாந்தி வெளியே சென்று இருந்த நேரத்தில் பிரகாஷ் வீட்டில் இருந்த தன்னுடைய தந்தை செல்வராஜை கழுத்தை அறுத்து கொடூரமான முறையில் கஞ்சா போதையில் கொலை செய்துள்ளார். அதன் பிறகு பக்கத்து வீட்டில் வசித்து தன்னுடைய அக்கா பிரியாவின் வீட்டிற்கு சென்று அங்கும் தகராறு செய்து பிரியாவையும் கழுத்தை அறுத்து கொடூரமாக கொலை செய்துள்ளார். இது குறித்த தகவலின் பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று பிரகாஷை கைது செய்துள்ளனர். அதன் பிறகு செல்வராஜ் மற்றும் பிரியா ஆகியோரின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக போலீசார் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். இந்த சம்பவம் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.