தென்னிந்திய சினிமாவில் பிரபலமான பாடகியாக இருப்பவர் சின்மயி. இவர் கவிஞர் வைரமுத்து மீது பாலியல் புகார் தெரிவித்து பரபரப்பினை ஏற்படுத்தினார். இந்நிலையில் தற்போது சின்மயி தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் உடலுறவு குறித்து வெளிப்படையாக பேசி வீடியோ வெளியிட்டுள்ளார். அந்த வீடியோவில் சின்மயி கூறி இருப்பதாவது, முதல் முறையாக உடலுறவு கொள்ளும் போது அது தவறான புரிந்து கொள்ளுதலாக இருக்கிறது. முதல் முறை உடலுறவு ஈடுபடும்போது பெண்களுக்கு இரத்தம் வந்தால் அவள் கன்னித்தன்மை உடையவள் என்று ஆண்கள் கொண்டாடுகிறார்கள்.

ஆனால் அது தவறு. ரத்தப் போக்கு மட்டுமே ஒரு பெண்ணின் கன்னித்தன்மையை உணர்த்தாது. அதில் பல்வேறு விஷயங்கள் இருக்கிறது. இது தொடர்பான விழிப்புணர்வை அடைய ஆண் பெண் இருவருமே திருமணத்திற்கு முன்பாகவே பாலியல் கல்வி பற்றி தெரிந்து கொள்ள வேண்டும். இதற்காக ஆபாச பட வீடியோக்களை பார்த்து தெரிந்து கொள்வது தவறு என்று கூறியுள்ளார். மேலும் சின்மயி பேசிய வீடியோ தற்போது சோசியல் மீடியாவில் வைரல் ஆகி வருகிறது.

 

 

View this post on Instagram

 

A post shared by Chinmayi Sripada (@chinmayisripaada)