நடிகர், டைரக்டர், பாடகர் என்ற பன்முகதன்மை கொண்டவர்தான் நடிகர் பிருத்விராஜ். மலையாள சினிமாவில் இருந்து வந்த அவர் தமிழிலும் பல திரைப்படங்களில் நடித்து, தன் திறமையை வெளிப்படுத்தி இருக்கிறார். அண்மையில் மருநாடன் மலயாளி எனும் பெயரிலான யூடியூப் சேனலில் இவரை பற்றிய செய்தி ஒன்று வெளியாகியது.

அதாவது, சர்ச்சைக்குரிய படங்களை எடுத்ததற்காக அமலாக்கதுறை நடிகர் பிருத்விராஜை ரூ.25 கோடி அபராதம் கட்டுமாறு கட்டடாயப்படுத்தியுள்ளது என கூறப்பட்டது. இத்தகவல் பொய்யானது என்று பிருத்விராஜ் மறுத்துள்ளார். அபராதம் எதுவும் கட்டவில்லை என மறுப்பு தெரிவித்திருக்கும் அவர், அவதூறு ஏற்படுத்தும் விதமாக பொய்யான தகவல்களை பரப்பும் வலைதளங்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை மேற்கொள்ள போகிறேன் எனவும் தன் இன்ஸ்டாகிராமில் தெரிவித்துள்ளார்.