பிரபல இந்தி நடிகையாக வலம் வருபவர் ஜெனிபர் மிஸ்ட்ரி பன்சிவால். இவர் ஹல்லா போல், கிராஸி 4, ஏர்லிபட் ஆகிய படங்களில் நடித்திருக்கிறார். மேலும் தொலைக்காட்சி தொடர்களிலும் நடித்துள்ளார். டி.வி தொடர் சூட்டிங்கில் தனக்கு பாலியல் தொந்தரவு ஏற்பட்டதாக ஜெனிபர் பரபரப்பு புகாரளித்துள்ளார்.

இதுபற்றி அவர் அளித்துள்ள பேட்டியில் “நான் தாரக் மேத்தா கா ஊல்தா சாஸ்மா எனும் தொடரில் நடித்தபோது பாலியல் தொல்லைகளை எதிர் கொண்டேன். அத்தொடரின் தயாரிப்பாளர் அசித்மோடி மற்றும் 2 பேர் என்னிடம் தவறாக நடக்க முயன்றனர். ஆசைக்கு இணங்குமாறு வற்புறுத்தினர். இதில் தயாரிப்பாளர் பல முறை என்னை ஆசைக்கு இணங்க அணுகினார். இறுதியில் வேறு வழி இன்றி அத்தொடரிலிருந்து வெளியேறினேன்” என்று அவர் கூறினார்.