தமிழ் சினிமாவில் பட்டினப்பாக்கம் என்ற திரைப்படத்தின் மூலம் ஹீரோவாக அறிமுகமானவர் சரத்பாபு. தமிழ் மட்டுமின்றி தெலுங்கு, கன்னடம் மற்றும் மலையாளம் ஆகிய மொழிகளிலும் பல படங்களில் சரத் பாபு நடித்துள்ளார். சமீபகாலமாக உடல் நலக் குறைவினால் அவதிப்பட்டு வந்த சரத்பாபு தன்னுடைய 72 வயதில் காலமானார். இவருடைய உடல் நேற்று நல்லடக்கம் செய்யப்பட்டது.

இந்நிலையில் நடிகர் சரத்பாபுவின் நிறைவேறாத கடைசி ஆசை குறித்து தற்போது ஒரு தகவல் வெளிவந்துள்ளது. அதாவது நடிகர் சரத்பாபுவின் அப்பா பிரபலமான ஹோட்டல் தொழிலதிபராக இருந்துள்ளார். ஆனால் சரத்பாபுவிற்கு ஹோட்டல் தொழிலில் ஈடுபட விருப்பம் இல்லையாம். அவர் போலீஸ் அதிகாரியாக மாற வேண்டும் என ஆசைப்பட்டுள்ளார். ஆனால் சரத் பாபுவுக்கு கிட்ட பார்வை பிரச்சினை இருந்ததால் அவரால் போலீஸ் அதிகாரியாக மாற முடியவில்லை. மேலும் அதன் பிறகு தான் சினிமாவில் நடிக்க வேண்டும் என்ற எண்ணம் வந்து ஒரு நடிகராக மாறியுள்ளார் ‌